எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு: நாளை உத்தரவு

கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இடைக்கால முன்ஜாமின் மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. மனுவை விசாரித்த கரூர் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளார். ஏற்கனவே முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இடைக்கால முன்ஜாமின் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அபகரித்ததாக புகார் எழுந்தது. பிரகாஷ் என்பவர் அளித்த புகாரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

The post எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு: நாளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: