இதை தொடர்ந்து புதிய வழித்தடமாக சென்னையின் புறநகர் பகுதிகளான சிறுசேரி – கிளாம்பாக்கம், பூந்தமல்லி – பரந்தூர், கோயம்பேடு – ஆவடி ஆகிய பகுதிகளையும் மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக முதல்கட்டமாக சாத்திய கூறு அறிக்கை தயாரிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்த அறிக்கை தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாக அதிகாரி கூறியதாவது: மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.
The post கோயம்பேடு – ஆவடிக்கு மெட்ரோ ரயில் சேவை: சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிப்பு; விரைவில் அரசிடம் சமர்ப்பிப்பு appeared first on Dinakaran.