இதனிடையே ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டானியோ குட்டரஸ், பாலஸ்தீன மக்கள் 56 ஆண்டுகளாக மூச்சுத் திணறும் அளவிற்கு ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்டு வருவதாகவும் ஹமாஸின் தாக்குதல்கள் வெற்று இடத்தில் நடத்தவில்லை என்பதை அங்கீகரிப்பது முக்கியம் எனவும் பேசினார். மேலும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் காசாவில் தெளிவாக மீறப்படுவதை நாம் கண்கூடாகப் பார்த்து வருவது கவலை அளிப்பதாக குறிப்பிட்ட நிலையில், அதே நேரம் ஹமாஸ் தாக்குதலை தாம் நியாயப்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளரின் பேச்சு ஒருதலைப்பட்சமாக இருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
The post காசாவில் 2000 குழந்தைகள் பலி.. பாலஸ்தீன மக்கள் 56 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்டு வருவதாக ஐ.நா.கவலை!! appeared first on Dinakaran.