பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சிறையில் இருந்து 18 கைதிகள் தப்பி ஓட்டம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவலகோட் சிறைச்சாலையில், கடந்த வெள்ளியன்று கைதி ஒருவர், துப்பாக்கி முனையில் சிறை காவலரை மிரட்டி சிறையின் சாவியை பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து அங்கிருந்து 18 கைதிகள் தப்பி சென்றுள்ளனர். இதில் 6 பேர் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.

3 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தவர்கள். மற்றொரு கைதி தப்பி செல்லும்போது காவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தப்பியவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறைச்சாலை துணை கண்காணிப்பாளர் உட்பட 7 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

The post பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சிறையில் இருந்து 18 கைதிகள் தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.

Related Stories: