போபால் : மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தலைமைச் செயலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் போபாலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீ விபத்தால் பல அடி உயரத்துக்கு கரும்புகை வெளியேறி வருவதால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.