புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் விற்க தடை விதித்து கலால்துறை அதிரடி உத்தரவு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் விற்க தடை விதித்து கலால்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரியில் 85 சாராயக் கடைகளும், காரைக்காலில் 25 சாராயக் கடைகளும் உள்ளன. இந்த சாராயக் கடைகளில் பாக்கெட் சாராயம் விற்பனை செய்ய அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து ஆகஸ்ட் 7ம் தேதி பாக்கெட் சாராயம் விற்க கலால்துறை அனுமதி வழங்கியிருந்தது. இதனால் சாராய கடைகளில் பாக்கெட் சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில்,புதுச்சேரி, காரைக்காலில் பாக்கெட் சாராய விற்பனைக்கு கலால்துறை தடை விதித்துள்ளது. இது தொடர்பாக புதுவை அரசு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கலால்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், புதுச்சேரியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சாராய பாக்கெட்டுகளுக்கும் பொருந்தும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதுவை அரசு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல்துறையின் உத்தரவின்படி புதுச்சேரி, காரைக்காலில் மீண்டும் பாக்கெட் சாராயம் விற்பனைக்கு தடை விதித்து கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருளுக்கு தடை விதிக்கப்பட்டதால் பாக்கெட் சாராய அனுமதி வாபஸ் பெறப்பட்டது.

The post புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் விற்க தடை விதித்து கலால்துறை அதிரடி உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: