சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்னையில் அதிகளவு கூடும் இடங்களான தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று (10.11.2023) மதியம் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர் தி.நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, தி.நகர் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் சென்னை பெருநகர காவல் துறை சார்பாக செய்யப்பட்டுள்ள சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின் போது கூடுதல் ஆணையாளர் தெற்கு திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப, இணை ஆணையாளர் (தெற்கு மண்டலம்) திரு.சிபி சக்ரவர்த்தி, இ.கா.ப, துணை ஆணையாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தி.நகர் பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த காவல் ஆணையாளர் appeared first on Dinakaran.