இதனிடையே இந்த எருமை மாட்டு உரிமையாளர் யார் என்பது குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரித்தனர். ஆனால் யாரும் உரிமை கொண்டாடவில்லை. இதையடுத்து காயமடைந்த மதுமதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இரண்டு பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தெருக்களில் மாடுகளை சுற்றி திரிய விட்டால் சம்பந்தப்பட்ட மாட்டின் உரிமையாளர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட மதுமதியின் குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் வழங்க கோரி அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு வந்த மண்டலக்குழு தலைவர் தனியரசு முற்றுகையிட்டவர்களிடம் சமாதானம் செய்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
The post மாடு முட்டி பெண் படுகாயம்; 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.