இந்நிலையில் தேர் மற்றும் தரிசனம் முடிவுற்று சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமான் சித்சபைக்கு பிரவேசம் செய்தனர். நேற்று மாலை உதவி கலெக்டர் (பொறுப்பு) பூமா, தாசில்தார் செல்வக்குமார், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் சந்திரன் ஆகியோர் சிதம்பரம் டிஎஸ்பி ரகுபதி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாருடன் சென்று கனகசபை படி வாயிலில் இருந்த அறிவிப்பு பதாகையை ஊழியர்கள் மூலம் அதிரடியாக அகற்றினர். அதன் பின்னர் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தீட்சிதர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.
கனகசபையின் கதவை உட்புறமாக பூட்டி தீட்சிதர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று கோட்டாட்சியர் முன்னிலையில் தீட்சிதர்கள் உடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
The post சிதம்பரம் கோவிலில் கனகசபையில் பக்தர்களை அனுமதிக்காமல் கதவை உட்புறமாக பூட்டிக் கொண்ட தீட்சிதர்கள்!! appeared first on Dinakaran.