சென்னை கொத்தவால்சாவடியில் கோயிலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைதானவர் அதிர்ச்சி வாக்குமூலம்..!!

சென்னை: சென்னை கொத்தவால்சாவடியில் கோயிலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைதான முரளிகிருஷ்ணன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அடிக்கடி தனது காதில், உயிரோடு இருக்காதே என்று ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருந்ததாக திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார். வீட்டின் மேலே இருந்து குதித்து விடு, தற்கொலை செய்து கொள், எப்படியாவது இறந்து விடு என ஒரு குரல் கேட்டுக் கொண்டே இருந்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் தந்துள்ளார். வேண்டியதை கடவுள் நிறைவேற்றாததால், கோயிலில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு, தான் தற்கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் முரளிகிருஷ்ணன் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

The post சென்னை கொத்தவால்சாவடியில் கோயிலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைதானவர் அதிர்ச்சி வாக்குமூலம்..!! appeared first on Dinakaran.

Related Stories: