ஜல்னா மாவட்டம் அந்தர்வாலி சாரதி கிராமத்தில் போராட்டம் நடத்தி வரும் ஜாரங்கே நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜாரங்கே, “பீட் தொகுதியில் மராத்தாவினர் பாஜவுக்கு வாக்கு செலுத்தாததால் பாஜ வேட்பாளர் பங்கஜ முன்டே தோற்று போய் விட்டதாக பாஜவினர் நினைக்கின்றனர். இதற்காக பீட் மாவட்டத்தின் ஒருசில கிராமங்களில் மராத்தாக்கள் மீது பாஜவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பீட் காவல்துறை கண்காணிப்பாளர், மாநில உள்துறை அமைச்சர் தேவேந்திர பட்நவிசும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த விவகாரத்தில் மராத்தா இளைஞர்கள் அமைதி காக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
The post பாஜவுக்கு வாக்களிக்காத மராத்தாக்கள் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்க ஜராங்கே வலியுறுத்தல் appeared first on Dinakaran.