இதனையடுத்து பேரூராட்சி நிர்வாகம் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆடு அடிக்கும் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் ₹17 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் நவீன இயந்திரங்கள் வாங்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் சீரமைக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் ஆடு அடிக்கும் தொட்டி மீண்டும் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது. இதனால் ₹37 லட்சம் பணம் வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் ஆடு அடிக்கும் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென திருமழிசை பேரூராட்சி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post 12 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராமல் 37 லட்சத்தில் கட்டப்பட்ட ஆடு அடிக்கும் தொட்டி வீண் appeared first on Dinakaran.