பெரம்பலூர், நவ 1: பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய நாட்டிய-நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்வதற்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர்(பொ) ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழில் சிறந்த நாட்டியங்களை உருவாக்கி மேடையேற்றம் செய்யும் நிறுவனங்களுக்கு நல்கை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் 2019-2020 ஆம் ஆண்டிற்கான, தமிழில் புதிய நாட்டிய-நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய கலை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.