தாதம்பேட்டை வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

தா.பழூர், ஏப். 21:அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோயில் தாதம்பேட்டை கிராமத்தில் பெருந்தேவி நாயகா சமேத வரதராஜ பெருமாள் சுவாமி கோயில் பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு நேற்று (22ம் தேதி) திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 17ம் தேதி மாலை  பகவத் அனுக்ஞை, புண்யாகவாசனம் ,அங்குரார்ப்பணம் வாஸ்து ஹோமம் நடைபெற்றது.

பின்னர் 18ம் தேதி காலை மிதுன லக்னத்தில் த்வஜாரோகணம், சூரிய பிரபை, ஹோமம், சேவை சாற்று மறையும், மாலை சந்திரபிரபை வாகனம், ஹோமம், சேவை சாற்று மறை நடைபெற்றது.19ம் தேதி காலை சேஷ வாகனத்தில் பரமபதநாதன் சேவை புறப்பாடு, ஹோமம் , சேவை சாற்று மறையும், மாலை கருட சேவை புறப்பாடு ஹோமம் திருமஞ்சனம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன் தினம் காலை ஹனுமந்த வாகனம் ஹோமம் சேவை சாற்றுமறை நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை திருக்கல்யாணமும் யானை வாகன ஹோமம் சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று காலை திருத்தேர் வீதி உலாவும், தீர்த்தவாரி திருமஞ்சனமும் நடைபெற்றது.

The post தாதம்பேட்டை வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: