பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி

 

பெரம்பலூர்,ஏப்.20: பெரம்பலூர் மாவட்ட கிரிக் கெட் வீரர்களுக்கான தேர் வுப் போட்டி இன்று(20ஆம் தேதி நடக்கிறது என பெரம்ப லூர் மாவட்ட கிரிக்கெட் சங்க இணைச் செயலாளர் ராமானுஜம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்ட கிரிக் கெட் சங்கத்தின் சார்பில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட கிரிக் கெட் வீரர்கள் தேர்வுப் போட்டி இன்று (20ம் தேதி) காலை 9 மணியளவில்,

பெரம்பலூர் அருகே சிறு வாச்சூர் ஸ்ரீ ராம கிருஷ்ணா பொறியியல் கல்லூரி கிரிக்கெட் மைதா னத்தில் நடைபெறுகிறது. இதில் தகுதியுடைய விருப் பமுள்ள கிரிக்கெட் வீரர்கள் தங்களின் வயது சான் றிதழ் மற்றும்ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ள லாம். மேலும் விபரங்க ளுக்கு – 9159845585, 9865953023 என்ற எண் ணில் தொடர்பு கொள்ள லாம் என பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளர் ராமா னுஜம் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: