புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது

தா.பழூர், ஏப்.18:அரியலூர் மாவட்டம் தா.பழூர் காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் சோழமாதேவி, கோடாலி கருப்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை மறித்து சோதனை செய்ததில் அரசு அனுமதி இன்றி அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்வதற்கு எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மது பாட்டில்களை எடுத்துச் சென்ற இடையர் கிராமம் கீழத் தெருவை சேர்ந்த நாகமுத்து மகன் கர்ணன் (39,) அமிர்தராயங்கோட்டை கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த சின்னதுரை மகன் ஸ்டாலின் (38) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: