பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு போட்டி

 

பெரம்பலூர்,ஏப்.21: பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி- 97பேர் பங்கேற்றனர். பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது மற்றும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வுப் போட்டி நேற்று காலை 10 மணியளவில், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தத் தேர்வுப் போட்டியில் பங்கேற்க பெரம்பலூர் மாவட்ட அளவில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் கிளப்புகள் ஆகியவற்றில் விளையாடி திறமை பெற்ற 97 பேர் கலந்து கொண்டனர்.இந்தத் தேர்வு போட்டிகளை பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளர் ராமானுஜம் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் பயிற்சியாளரான செந்தில்குமார் தேர்வாளராகக் கலந்து கொண்டு சிறந்த வீரர்களைத் தேர்வு செய்தார்.இதில் சிறந்த பேட்டிங், சிறந்த பவுலிங், சிறந்த பில்டிங், சிறந்த கீப்பிங் அடிப்படையில் 16 வயதிற்குட்பட்டோருக்கான அணிக்கும், 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கும் தலா 20க்கும் மேற்பட்டோரைத் தேர்வு செய்துள்ளனர். விரைவில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களின் பெயர்பட்டியல் வெளியிடப்படும். பின்னர் அவர்களுக்கு நாட்கள் குறிக்கப்பட்டு, திறமை வாய்ந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சிகள் வழங்கப்படும்.

The post பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு போட்டி appeared first on Dinakaran.

Related Stories: