செங்கல்பட்டு: சிறுபான்மை இனத்தை சேர்ந்த கைவினை கலைஞர்கள், தங்களது தொழிலை தொடங்கும் வகையில், கடனுதவி வழங்கப்படும் என செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம், தமிழகத்தில் பொருளாதரத்தில் பின்தங்கிய சிறுபான்மை இனத்தை சேர்ந்த கைவினை கலைஞர்களுக்கு, விராசாட் திட்டத்தின் மூலம் கைவினை பொருட்கள் செய்ய பயன்படும் மூலப்பொருட்கள், கருவிகள், இயந்திரங்கள் வாங்குவதற்கு கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.