மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மாநில அளவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் பங்கேற்றனர். காஞ்சி ஸ்கேட்டிங் & ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் சார்பில், கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் ஸ்கேட்டிங் பயிற்சியில் சிறப்பிக்கும் வகையில், கடந்த ஆண்டு மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடத்தப்பட்டது. இந்த ஆண்டிற்கான 2ம் கட்ட மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் அருகில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தர்மபுரி, பாண்டிச்சேரி உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 2 வயது முதல் 13 வயது வரையிலான 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இதில் ஒவ்வொரு சுற்றிருக்கும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

The post மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: