சாலவாக்கத்தில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறையினர் சோதனை

உத்திரமேரூர்: சாலவாக்கம் கிராமத்தில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். உத்திரமேரூர் அருகே சாலவாக்கம் கிராமத்தில் பஜார் வீதியில் உள்ள கடைகள் முழுவதிலும் சுகாதாரத்துறையினர் நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால் ஏசுதாஸ் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் லோகநாதன், அம்பிகாபதி, காசிநாதன், நிரஞ்சன், சதீஷ்குமார், சந்தோஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் சாலவாக்கம் பஜார் வீதி கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்டனர். மேலும் போதை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

The post சாலவாக்கத்தில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறையினர் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: