சென்டர் மீடியனில் பைக் மோதி புரோக்கர் பலி

கூடுவாஞ்சேரி: சென்னை அடுத்த மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம், 5வது தெருவை சேர்ந்த சேக் அப்துல்லா என்பவரது மகன் முகமது ரியாசுதீன்(34). இவர் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் பேருந்துகளுக்கு டிராவல்ஸ் புக்கிங் செய்யும் புரோக்கராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வண்டலூர் மேம்பாலம் கீழ்பகுதியில் செல்லும்போது நிலை தடுமாறி அங்குள்ள சென்டர் மீடியனில் பைக் மோதி தூக்கி வீசப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்தது வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் முகமது ரியாசுதினை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்டர் மீடியனில் பைக் மோதி புரோக்கர் பலி appeared first on Dinakaran.

Related Stories: