கடலூர், அக். 22: கடலூர் முதுநகர் அருகே உள்ள சொத்திக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கவியரசி(30). இவருக்கும், தைக்கால் தோணித்துறை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது, இதில் கவியரசி கர்ப்பம் அடைந்தார். தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், சம்பந்தப்பட்ட வாலிபர் வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த கவியரசி, நேற்று காலை அந்த வாலிபரின் வீட்டின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.