வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் காயம்

திருவெண்ணெய்நல்லூர், ஏப்.30: திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.புதுப்பாளையம் கிராமத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் காயம் அடைந்தனர். திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி. இவருக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு வழங்கப்பட்டது. அந்த வீட்டை காண்டிராக்டர் மூலம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. வீடு தரமின்றி கட்டிக் கொடுத்ததால் நேற்று முன்தினம் வீட்டின் மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் இடிந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேசமூர்த்தியின் உறவினர் கோவிந்தன் அவரது மனைவி காசாம்பாள் மற்றும் மகன் உள்ளிட்ட மூன்று பேர் மீது விழுந்தது. இதில் மூவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: