புகையிலை பொருட்கள் கடத்தல்

 

பண்ருட்டி, ஏப். 29: மொபட்டில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் எழில்தாசன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் மேல் குமாரமங்கலம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மொபட்டை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்ப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து மொபட்டில் வந்தவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், பண்ருட்டி திருவதிகை பழைய கடலூர் ரோடு புருஷோத்தம்மன் என்பவரது மகன் கார்த்திகேயன் (39) என தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து மொபட் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆகியவைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post புகையிலை பொருட்கள் கடத்தல் appeared first on Dinakaran.

Related Stories: