பூட்டிய வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

கோவை அக்.2:  கோவை வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் மனைவி செல்வி (32). கடந்த வாரம் இவர் தனது குடும்பத்தினருடன் தேனி மாவட்டத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் இவரது வீடு கதவு பூட்டு உடைந்து கிடந்தது. அக்கம் பக்கத்தினர் செல்விக்கு செல்போன் மூலம் தகவல் அளித்தனர். இது தொடர்பாக போத்தனூர் போலீசில் புகார் தரப்பட்டது. போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டிருந்தது. பீரோ லாக்கரில் இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் 50,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: