செய்யூர், மார்ச் 19: சென்னையில் இருந்து மதுராந்தகம், ஜமீன் எண்டத்தூர், அரியனூர் வழியாக செய்யூர் வரை இயக்கப்படும் அரசு பஸ்சை பழைய நேரப்படி மீண்டும் இயக்க வேண்டும். மேலும், சென்னையில் இருந்து மதிய நேரத்தில் நேரடியாக செய்யூருக்கு இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், ஜமீன் எண்டத்தூர், கல்பட்டு, அரியனூர், அம்மனூர் வழியாக செய்யூர் வரை அரசு விரைவு பஸ் (தஎ 83) இயக்கப்படுகிறது. இந்த பஸ், காலை 8 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு மதியம் 11.40 மணிக்கு மதுராந்தகம் சென்று, அங்கிருந்து செய்யூருக்கு புறப்பட்டு சென்றடையும். பின்னர், செய்யூரில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணியளவில் சென்னைக்கு புறப்படும். மீண்டும் சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 8 மணியளவில் மதுராந்தகம் வந்து, அங்கிருந்து செய்யூர் சென்று, இரவு தங்கி விட்டு, அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு செல்லும். சென்னை பணிமனையில் இருந்து இயக்கிய நேரம் என்பதால், இந்த பஸ் நிறுத்தப்படாமல் தொடர்ந்து இயக்கப்பட்டது. வசூலும் அதிகரித்துள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர்.