கரூர், மார்ச் 13: கரூர் சுங்ககேட் பகுதியில் இருந்து தெரசா கார்னர் வரை தடுப்புச் சுவர் அமைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூரில் இருந்து திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சுங்ககேட், தெரசா கார்னர் வழியாக சென்று வருகின்றன. இதில் தெரசா கார்னர் பகுதியில் இருந்து காந்திகிராமம் வரை சாலையின் மையப்பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆபத்தான பிரிவுச் சாலைகளை உள்ளடக்கிய சுங்ககேட் பகுதியில் இருந்து தெரசா கார்னர் வரை தடுப்புச் சுவர் இல்லாத காரணத்தினால் அனைத்து தரப்பு வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.