காஞ்சிபுரம், மார்ச் 13: காஞ்சிபுரம் வருவாய் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு வருவாய் மாவட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி ஓய்வூதியர் சங்க செங்கல்பட்டு மாவட்ட அமைப்பு தொடக்க விழா மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. மாநில துணை தலைவர் சீத்தாரமன் தலைமை தாங்கி தேர்தல் அலுவலராகவும் செயல்பட்டார். மாநில பொருளாளர் காளிங்கராயன், தலைமை நிலைய செயலாளர் ஆறுமுகம், மாநில மகளிரணி மண்டோதரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் பக்தவச்சலம், தேவசித்தம் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.