தீ விபத்து நிவாரணம் வழங்கல்

முஷ்ணம், மார்ச் 12: முஷ்ணம் அருகே கொழை ஊராட்சியில் ராஜேந்திரன் என்பவரின் கூரை வீடு நேற்று முன்தினம் இரவு தீபிடித்து எரிந்தது. இதில் வீட்டு உபயோக பொருட்கள், டிவி, பிரிட்ஜ், மனை பத்திரம் ஆகியவை தீயில் எரிந்து சேதமானது. சேதமதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும். இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு முஷ்ணம் வட்டாட்சியர் புகழேந்தி சார்பில் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. இதுபோன்று ஒன்றிய துணை தலைவர் திருசெல்வம், கொழை ஊராட்சி மன்ற தலைவி பிரேமா இளையராஜா, மேல்பாதி கிராம நிர்வாக அலுவலர் காமராஜ், கிராம உதவியாளர் அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: