ஈரோடு, மார்ச் 6: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாவில் இன்று (6ம் தேதி) வருவாய்த்துறை அம்மா திட்ட முகாம் மற்றும் சிறப்பு குறைதீர் கூட்ட முகாம்கள் நடைபெற உள்ளது. அதன்படி, ஈரோடு தாலுகாவில் பேரோடு விஏஓ அலுவலகத்திலும், மொடக்குறிச்சி தாலுகாவில் நஞ்சை ஊத்துக்குளி விஏஓ அலுவலகத்திலும், கொடுமுடி தாலுகாவில் கொடுமுடி விஏஓ அலுவலகத்திலும், பெருந்துறை தாலுகாவில் புங்கம்பாடி விஏஓ அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.பவானி தாலுகாவில் தொட்டிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், அந்தியூர் தாலுகாவில் வெள்ளித்திருப்பூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், கோபிச்செட்டிபாளையம் தாலுகாவில் கொங்கர்பாளையம் பழைய அரசு உயர்நிலைப்பள்ளியிலும் கூட்டம் நடைபெற உள்ளது.