கடலூர், மார்ச் 3: கடலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு வரும் விவசாயிகள் வங்கி கணக்கு புத்தகம், ஆதார் நகல் எடுத்து வர வேண்டுமென கடலூர் முதுநகர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் ஆனந்த் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பு: கடலூர் முதுநகர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரொக்க பண பரிவர்த்தனையை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை நடைமுறை படுத்தும் நோக்கில் விரைவில் மின்னணு தேசிய வேளாண் சந்தை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதன் மூலம் வேளாண் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளுக்கு உரிய தொகை இனிவரும் நாட்களில் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது.