பெண் தூக்கிட்டு தற்கொலை

புவனகிரி, ஜூன் 11: புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி ஆனந்தஜோதி(37). சம்பவத்தன்று இவர்களுக்கிடையே உணவு சமைக்கும்போது வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஆனந்த ஜோதி வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து ஆனந்தஜோதியின் தந்தை சுப்புராயன் புவனகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: