ஆற்றில் மணல் திருடியவர் கைது

காட்டுமன்னார்கோவில், ஜூன் 9: காட்டுமன்னார்கோவில் அடுத்த குணவாசல் கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் கொள்ளிடம் ஆற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் மணல் மூட்டைகளை ஏற்றி வந்த நபரை பிடிக்க முயன்ற போது பைக்குடன் மணல் மூட்டைகளை அங்கேயே போட்டு விட்டு அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் தப்பி ஓடிய நபர் குறித்து விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் சிலம்பரசன் (34) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர்.

The post ஆற்றில் மணல் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: