வேலூர், பிப்.28: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 6ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மற்றும் பிற துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள் பெறுவது சம்பந்தமாக விண்ணப்பங்கள் அளிக்கலாம்.