கோவை, பிப். 27: கோவை அரசு கலைக்கல்லூரியில் தேசிய தர நிர்ணய குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது. இன்றும் இரண்டாவது நாளாக இந்த ஆய்வு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை அரசு கலைக் கல்லூரி சுமார் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இக்கல்லூரியில் தற்போது இளநிலையில் 24 பட்டப்படிப்புகளும், முதுநிலையில் 21 பட்டப்படிப்புகளும் நடத்தப்படுகிறது. சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தேசிய தர மதிப்பீட்டில் இக்கல்லூரிக்கு ‘ஏ பிளஸ்’ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ‘ஏ பிளஸ் பிளஸ்’ அங்கீகாரத்தை எதிர்நோக்கி உள்ளது.
இந்நிலையில், பாடத்திட்டம், கற்றல் கற்பித்தல், ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு, மாணவர் முன்னேற்றம் உள்ளிட்ட ஏழு அடிப்படைகளில் ஆய்வு நடத்துவதற்காக தேசிய தர நிர்ணய குழுவினர் நேற்று கல்லூரிக்கு வந்தனர்.