பைக் திருடியவர் கைது

தூத்துக்குடி, பிப்.26: தூத்துக்குடி அருகே கீழஅழகாபுரியை சேர்ந்தவர் ஆறுமுகம் (50). இவர் தாளமுத்துநகர் பஜார் பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது ஒருவர் ஆறுமுகத்தின் பைக்கை திருடி செல்ல முயன்றார். இதனை கண்ட ஆறுமுகம் மற்றும் அக்கம் பக்கத்தினர், அந்த நபரை பிடித்து தாளமுத்துநகர் போலீசில் ஒப்படைத்தனர்.போலீசார் விசாரணையில் அவர் தாளமுத்துநகர் சுனாமி காலனியை சேர்ந்த பீர்முகமது (19) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பீர் முகமதுவை கைது செய்தனர்.

Related Stories: