விவசாயியிடம் பணம் கேட்டு மிரட்டிய இருவர் கைது

தூத்துக்குடி, பிப்.26: தூத்துக்குடியில் விவசாயியிடம் பணம் கேட்டு மிரட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி அருகேயுள்ள இந்திரா காலனியை சேர்ந்த விவசாயி நடராஜன் (52). இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனை அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சுந்தரவேல்புரத்தை சேர்ந்த தாசன் மகன் ராபின்சன் (24), தூத்துக்குடி பீச் ரோட்டை சேர்ந்த முருகேசன் மகன் பிரகாஷ் (23) ஆகியோர், நடராஜனை வழிமறித்து பணம் கேட்டுள்ளனர். ஆனால் நடராஜன் அவர்களுக்கு பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதில் ராபின்சன், பிரகாஷ் ஆகியோர் ஆத்திரம் அடைந்து நடராஜனை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் ராபின்சன், பிரகாஷ் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: