பாடாலூர், பிப். 26: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தனி சன்னதி கொண்டு செல்வம் மற்றும் புகழை வாரி வழங்கும் குபேர பெருமானின் ஜென்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று ஒவ்வொரு மாதமும் குபேர ஹோமம், சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. அதன்படி நேற்று ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள குபேரன் சன்னதி முன்பு சிறப்பு யாகபூஜை நடத்தப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.