செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர ஹோம சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் வழிபாடு

பாடாலூர், பிப். 26: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தனி சன்னதி கொண்டு செல்வம் மற்றும் புகழை வாரி வழங்கும் குபேர பெருமானின் ஜென்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று ஒவ்வொரு மாதமும் குபேர ஹோமம், சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. அதன்படி நேற்று ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள குபேரன் சன்னதி முன்பு சிறப்பு யாகபூஜை நடத்தப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

குபேர ஹோம சிறப்பு பூஜைகளில் பங்கேற்றால் கடன் தீர்ந்து செல்வம் பெருகும். செல்வாக்கு உயரும் என்பது நம்பிக்கை. இதனால் குபேர யாகம் மற்றும் சிறப்பு அபிஷேகத்தில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், பாடாலூர், ஆலத்தூர்கேட், நாரணங்கலம், குரூர், பொம்மனப்பாடி, மாவலிங்கை, பெரம்பலூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Related Stories: