தென்காசி, பிப். 21: ரோட்டரி மாவட்டம் 3212 சார்பில் செயல்பட்டுவரும் அனைத்து மாவட்டத்திலும் அன்னதான திட்டம் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்படி மாவட்ட ஆளுநரின் அன்னதான திட்டம் தொடக்க விழா, நேற்று முன்தினம் புளியங்குடி டி.என்.புதுக்குடி ஆர்சி உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. விழாவிற்கு ரோட்டரி மாவட்டம் அன்னதான திட்ட சேர்மன் பாலாஜி கிரானைட்ஸ் உரிமையாளர் சங்கரநாராயணன் வரவேற்றார். மாவட்ட ஆளுநர் ஷேக் சலீம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அன்னதான திட்டத்தை ெதாடங்கி வைத்து பேசியதாவது: மாவட்ட ஆளுநரின் அன்னதான திட்டத்தை ரோட்டரி மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்துவதற்கான பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. மேலும் பாலாஜி கிரானைட்ஸ் உரிமையாளர் சங்கரநாராயணன் புளியங்குடியில் அன்னதான திட்டத்தை வழங்குவது சிறப்புக்குரியது, என்றார்.