முத்தையாபுரத்தில் பைக் திருடியவர் கைது

ஸ்பிக்நகர், பிப்.20: தூத்துக்குடி முத்தையாபுரம் டாஸ்மாக் பாரில் நிறுத்தியிருந்த பைக்கை திருடியவர் கைது செய்யப்பட்டார். முள்ளக்காடு காந்திநகர் பகுதியை சேர்ந்த சிவனுபாண்டியன் மகன் செல்வக்குமார்(49).  இவர் முத்தையாபுரம் டாஸ்மாக் பாரில் கேஷியராக வேலைபார்த்து வருகிறார். பாருக்கு சொந்தமான இருச்சக்கர வாகனத்தை ஒருவர் திருடிச்சென்றார். இதனைபார்த்த செல்வக்குமார் அவருடைய நண்பர்களுடன் அவரை பின்தொடர்ந்து சென்று வாகனத்தை கைப்பற்றினர். அவரை பிடித்து முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் முள்ளக்காடு ராஜீவ்நகரை சேர்ந்த பன்னீர்செல்வம் (31) என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் எஸ்எஸ்ஐ குமரேசன் வழக்குப்பதிவு செய்தார். எஸ்ஐ சேட்டைநாதன் பன்னீர்செல்வத்தை கைது செய்தார்.

Related Stories: