சென்னை: பெரியபாளையம் அருகே புன்னப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்வதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட சட்ட பணிகள் ஆணையக்குழு செயலாளரும், நீதிபதியுமான சரஸ்வதி தலைமையில் ஊத்துக்கோட்டை தாசில்தார் முருகநாதன், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன், வெங்கல் இன்ஸ்பெக்டர் ஜெயவேல், வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் ஊத்துக்கோட்டை எஸ்.ஐ ராக்கிகுமாரி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை திடீரென புன்னப்பாக்கம் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் சோதனை நடத்தினர்.