வேலூர், பிப்.20:மயான கொள்ளை திருவிழாவையொட்டி தேர் ஊர்வலம் பகல் 2 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று விழாக்குழுவினருடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் டிஎஸ்பி துரைபாண்டியன் பேசினார்.வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆண்டுதோறும் மாசி மாத அமாவாசையன்று மயான கொள்ளை திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மயான கொள்ளை திருவிழா வரும் 23ம் தேதி கொண்டாடப்பட்டது.விழாவையொட்டி வேலூர் சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், சத்துவாச்சாரி, விருதம்பட்டு மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அங்காளபரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்வது வழக்கம். பல இடங்களில் சாமியை தேரில் வைத்து எடுத்து செல்வார்கள்.இந்நிலையில் விருதம்பட்டு காவல் நிலையத்தில் மயான கொள்ளை திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம் நேற்றிரவு நடந்தது. காட்பாடி தாசில்தார் பாலமுருகன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் புகழ் வரவேற்றார்.