காரைக்குடி, பிப். 19: காரைக்குடியில் செல்போனில் நூதனமாக பேசி முதியவரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.5.75 லட்சத்தை அபேஸ் செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்குடி அருகே அரியக்குடியை சேர்ந்தவர் சவரிமுத்து (60). இவர், காரைக்குடி ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். கடந்த வாரம் சவரிமுத்துவின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், ஸ்டேட் வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்து ரகசிய எண்ணை கேட்டுள்ளார்.சவரிமுத்துவும் வங்கி அதிகாரிகள் பேசுவதாக நினைத்து ரகசிய எண்ணை கொடுத்துள்ளார். இந்நிலையில் சவரிமுத்து நேற்று வங்கிக்கு சென்று கணக்கை சரிபார்த்துள்ளார். அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சத்து 74 ஆயிரத்து 996 எடுக்கப்பட்டிருந்தது.