கொள்ளிடம்,பிப்.19: உழவர் கடன் அட்டை பெற விவசாயிகளுக்கு வேளாண் இயக்குநர் அறிவுரை வழங்கியுள்ளார்.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் கிராமத்தில் விவசாய கடன் அட்டை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் தலைமை வகித்து பேசுகையில். பிரதமரின் விவசாய கவுரவ நிதித்திட்டத்தில் பயன்பெற்ற விவசாயிகளும், தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் உழவர் கடன் அட்டை பெற்று பயனடையலாம். இதன் மூலம் 15 நாட்களுக்கு பின் கடன் அட்டை வழங்கப்பட உள்ளது. இந்த கடன் அட்டையை பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் விவசாய சேமிப்பு திட்ட கணக்கு உள்ள வங்கிக் கிளையை அணுகி உழவர் கடன் அட்டையை பெற்று மானிய சலுகையுடன் வங்கி கடன் பெறலாம்.