மாதர் தேசிய சம்மேளனத்தினர் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி, பிப். 19: சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகப் போராடிய  இஸ்லாமிய பெண்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதலை கண்டித்து கோவில்பட்டியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவில்பட்டி புதுக்கிராமம் மெயின்ரோடு பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் காசிபாரதி  தலைமை வகித்தார். நகரச் செயலாளர் கோமதி, மாவட்டச் செயலாளர் தனலட்சுமி, மாநில செயலாளர் நிஷா பேசினர். இதில் திரளாகப் பங்கேற்றோர் சென்னையில் தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து  கோஷமிட்டனர். இச்சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என தமிழக சட்டப்பேரவையில்   நிறைவேற்ற வேண்டும். காஸ் சிலிண்டர்  விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

Related Stories: