நாகை, பிப். 18: நாகையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்திய 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், சென்னையில் போலீசார் நடத்திய தடியடி சம்பவத்தை கண்டித்தும் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்ட செயலாளர் முகமதுஅல்ஆதில் உட்பட 25 பேர் மீது வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் வழக்குப்பதிவு செய்துள்ளார்.