சீர்காழியில் ஆண்டு பெருவிழாவையொட்டி புனித லூர்து அன்னை அலங்கார தேரில் பவனி

 

சீர்காழி, ஏப்.29: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புனித லூர்து அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா நேற்று வெகுமாரிசியாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஜெபமாலை நவநாள் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அன்னையின் திருத்தேர் பவனி பங்கு தந்தை அந்தோணி டேனியல் முன்னிலையில் வான வேடிக்கைகளுடன் பேண்ட் வாத்தியங்கள் முழங்க நடைபெற்றது. திருத்தேரில் புனித மிக்கேல் புனித அந்தோனியார் புனித லூர்து அன்னை எழுந்தருளினர். திருத்தேர் நான்கு வீதிகளில் வலம் வந்து ஆலயத்தை சென்றடைந்தது. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post சீர்காழியில் ஆண்டு பெருவிழாவையொட்டி புனித லூர்து அன்னை அலங்கார தேரில் பவனி appeared first on Dinakaran.

Related Stories: