பயணியிடம் நகை பறித்த வாலிபர் சிறையிலடைப்பு

மயிலாடுதுறை, மே 1: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் தைக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது ஆசித் மனைவி ரஹ்மத் நிஷா (30). இவர் மயிலாடுதுறையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு தனது குழந்தையுடன் ஊர் திரும்ப, மயிலாடுதுறை பழைய பஸ் நிலையத்தில் சிதம்பரம் நோக்கி சென்ற தனியார் பஸ்ஸில் ஏறினார். ரஹ்மத்நிஷாவின் கைக்குழந்தையின் கழுத்தில் கிடந்த 8 கிராம் செயினை மர்ம நபர் பறித்து க்கொண்டு ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குழந்தையின் கழுத்தில் கிடந்த பவுன் செயினை பறித்து சென்றவர் திருவாரூர் மாவட்டம் மாங்குடி கூடூர் தெற்கு தெருவை சேர்ந்த மகாலிங்கம் மகன் கணேசமூர்த்தி(30) என்பது தெரியவந்தது. கணேசமூர்த்தியை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பயணியிடம் நகை பறித்த வாலிபர் சிறையிலடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: