மோடி திறந்து வைத்த நாகப்பட்டினம் -தஞ்சாவூர் இருவழிச் சாலை பணி நிறைவடையாமல் சுங்கச்சாவடி திறப்பதை கைவிட வேண்டும்

சீர்காழி, ஏப்.27: சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில் திருமுலைப்பால் உற்சவத்தின் முக்கிய விழாவான தெப்போற்சவம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுர ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாத சுவாமி திருக்கோயிலில் திருநிலை நாயகி அம்பாள் பிரம்மபுரீஸ்வரர் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இக்கோயிலின் பிரம்ம தீர்த்த குளக்கரையில் திருஞானசம்பந்தருக்கு திருநிலை நாயகி ஞானப்பால் வழங்கிய புகழ் பெற்ற ஸ்தலமாகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் திருமுலைப்பால் உற்சவம் இந்த ஆண்டு கடந்த 15ஆம் தேதி வெகு விமரிசையாக தருமபுர ஆதீனம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.

விழாவின் முக்கிய விழாவான தெப்போற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி பிரம்ம தீர்த்த குளக்கரையில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் முருகன் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்த நிலையில் தெப்பம் மூன்று முறை வலம் வந்தது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி செந்தில் மற்றும் ஊழியர்கள் பக்தர்கள் செய்திருந்தனர்.

The post மோடி திறந்து வைத்த நாகப்பட்டினம் -தஞ்சாவூர் இருவழிச் சாலை பணி நிறைவடையாமல் சுங்கச்சாவடி திறப்பதை கைவிட வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: