திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி தினத்தை முன்னிட்டு தென்னை மரங்கள் நடும் விழா

நாகப்பட்டினம்,ஏப்.24: உலக பூமி தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி ஹர்ஷ்சிங் தென்னை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பூமியை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22ம் தேதி உலக பூமி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பபின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்தில் 100 தென்னை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை எஸ்பி ஹர்ஷ்சிங் நேற்று தொடங்கி வைத்தார்.

The post திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி தினத்தை முன்னிட்டு தென்னை மரங்கள் நடும் விழா appeared first on Dinakaran.

Related Stories: